வர்த்தகரின் மனைவிக்கு இந்த விடயமும் தெரியாதாம்!

Date:

இலங்கை மனித உரிமைகள் ஆணையாளர் என பெயர் பலகையுடன் பயணித்த நாட்டின் முன்னணி தங்க அடகு கடையின் உரிமையாளரின் மனைவிக்கு சொந்தமானது என கூறப்படும் வாகனத்தை கண்டி பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த பெயர்ப்பலகை மற்றும் அரச இலச்சினையுடன் கூடிய இந்த வாகனம் கண்டியில் உள்ள பிரதான நட்சத்திர ஹோட்டலுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போது, கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கண்டி மாவட்ட இணைப்பாளர் விரஞ்சன் டயஸ் சுமனசேகர, மத்திய மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம் செய்த முறைப்பாட்டின் பின்னர், மனித உரிமைத் துறையுடன் தொடர்பில்லாத நபர்கள் மனித உரிமைகள் ஆணையர் என்ற முறையில் பெயர்ப்பலகைகளைக் காட்டி வாகனங்களில் பயணிப்பது தொடர்பில், சம்பந்தப்பட்ட வாகனத்தை போலீசார் காவலில் எடுத்துள்ளனர்

சம்பவம் தொடர்பில் குறித்த பெண்ணிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். தன்னார்வ தொண்டு நிறுவனத்தால் தனக்கு இந்த பெயர் சூட்டப்பட்டதாகவும், அதை வாகனத்தில் காட்டுவது தவறு என்று தனக்குத் தெரியாது என்றும் அவர் காவல்துறையிடம் கூறியுள்ளார்.

கண்டி பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

மத்தியகுழு கூட்டத்தில் வெடித்த சுமந்திரன்- சிறிதரன் மோதல்

இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்தியகுழு கூட்டத்தில் வழக்கம் போல பெரும்...

கள்ளக்காதலனுடன் இணைந்து தாயைக் கொன்ற மகள்

திரப்பனை நகர எல்லைக்குட்பட்ட அத்துங்கம சந்திப்புக்கு அருகே உள்ள ஒரு வீட்டில்...

சிறிதரன் விவகாரத்தை ஆராய 3 பேர் கொண்ட குழு

பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தொடர்பாக முன்வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டுகளை ஆராய்வதற்காக அவரது இணக்கப்பாட்டுடன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்