வவுனியா பிரதி விவசாய பணிப்பாளரின் விடுதியை சுத்தம் செய்த, விவசாய திணைக்கள ஊழியர்கள் இருவர் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
வடக்கு விவசாய திணைக்களத்தில் தகுதியான உத்தியோகத்தர்கள் பற்றாக்குறையால், வவுனியா பிரதி விவசாய பணிப்பாளராக ஓய்வுபெற்ற ஒருவரை வடக்கு விவசாய திணைக்களம் கடந்த ஜனவரியில் நியமித்தது. இருந்தாலும், அந்த நியமனத்துக்கு பொதுச்சேவைகள் ஆணைக்குழு இதுவரை அங்கீகாரம் வழங்கவில்லை. இருப்பினும், அவருக்கு சம்பளம், விடுதி வசதி வழங்கப்பட்டு, கடமை புரிந்து வருகிறார்.
இந்த நிலையில், சில நாட்களின் முன்னர் வவுனியாவுள்ள பிரதி விவசாய பணிப்பாளரின் விடுதியை துப்புரவு செய்வதற்காக, அலுவலக நேரத்தில் 2 விவசாய திணைக்கள ஊழியர்களை அழைத்துச் சென்றதாகவும், அவர்களே குளவிக்கொட்டுக்கு இலக்கானதாகவும் குறிப்பிடப்படுகிறது.




