நூதன மோசடி: அசுத்தமான ஆடை அணிந்ததாக கூறி பெண்ணை கைது செய்து கொள்ளையடித்த போலி சுகாதார பரிசோதகர்கள் கைது!

Date:

பொது சுகாதார பரிசோதகர்கள் போல் வேடமணிந்து வீதியோரம் சென்று கொண்டிருந்த பெண்ணை அசுத்தமாக இருப்பதாக கூறி கைது செய்வதாக அச்சுறுத்தி கொள்ளையடித்த மூவரை கட்டுநாயக்க பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அசுத்தமான உடையில் பொதுப் பாதையில் சென்றதற்காக கைது செய்யப்பட்டதாகக் கூறி, மூன்று பேரும் பெண்ணை முச்சக்கர வண்டியில் ஏறும்படி வற்புறுத்தியதாகவும், பின்னர் வேறு இடத்திற்கு அழைத்துச் சென்று அவரிடம் இருந்து பெறுமதியான பொருட்களை கொள்ளையடித்ததாகவும் கூறப்படுகிறது.

போதைப்பொருளுக்கு அடிமையான இந்த மூன்று சந்தேக நபர்களும் 38, 47 மற்றும் 70 வயதுடையவர்கள் என கட்டுநாயக்க பொலிஸார் தெரிவித்தனர்.

மருதானை, தெமட்டகொட மற்றும் பொரளை ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் சந்தேகநபர்கள் மூவரும் இந்த செயற்பாட்டு முறையைப் பயன்படுத்தி PHIகளாகக் காட்டிக்கொண்டு கொள்ளையடிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பெண் கட்டுநாயக்க பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து, பாதுகாப்பு கமெராக்களை பரிசோதித்து முச்சக்கர வண்டி இலக்கம் அடையாளம் காணப்பட்டு சந்தேக நபர்களை அடியம்பலம மற்றும் வல்பொல பிரதேசத்தில் வைத்து கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பில் மீனவர் நலன் கருதி அபிவிருத்தி குழு கூட்டத்தில் எம்.பி மார் பேசுவதில்லை என ஈ.பி.டி.பி.கட்சி அந்தனிசில் ராஜ்குமார் குற்றச்சாட்டு

மட்டக்களப்பு நகரை அண்டிய பகுதிகள் மற்றும் கரையோர பிரதேசங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும்...

மட்டு நெடியமடுவில் பாலம் அமைக்க நீர் எடுக்க வெட்டிய பாதுகாப்பற்ற குழியில் 6 வயதுடைய சிறுவன் ஒருவர் தவறி வீழ்ந்து உயிரிழப்பு

மட்டக்களப்பு நெடியமடு பகுதியில் நீர்ப்பாசன திணைக்களம் ஆற்றின் குறுக்கே பாலம் அமைப்பதற்கு...

பாம்பு கடித்த நாவல்பழத்தை சாப்பிட்ட சிறுவன் பலி

நிலத்தில் வீழ்ந்து கிடந்த பாம்பின் விஷம் பட்டதாக சந்தேகிக்கப்படும் நாவல் பழத்தை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்