கிளிநொச்சி நீதிமன்றம் அதிரடி உத்தரவு: 24 பேரை பிணையெடுக்க குவிந்த 224 பேர்!

Date:

கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் கடந்த நேற்று வியாழக்கிழமை 28 பேரை பிணை
எடுப்பதற்காக 224 பேர் நீதிமன்றுக்கு சமூகமளித்திருந்தனர்.

கடந்த  ஈஸ்டர் தினத்தன்று பூநகரி பிரதேச செயலக பிரிவு குட்பட்ட நாச்சிக்குடா மற்றும் கரடிக்குன்று கிராமத்தைச் சேர்ந்தவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்தையடுத்து பொலீஸாரினால் 28 கைது செய்யப்பட்டனர்.

மேலும் 15 பேரை கைது செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்ற
நிலையில், கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றில் முற்ப்படுத்தபட்டதனை
தொடர்ந்து அவர்கள் கடந்த வியாழக்கிழமை பிணையில் செல்ல கிளிநொச்சி நீதவான்
நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.

இதன் போது கைது செய்யப்பட்ட 28 பேருக்கும் ஊருக்குள் புகுந்து சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தியமை, தாக்கியமை, என எட்டு முறைப்பாட்டாளர்கள் முறைப்பாடு செய்திருந்தனர்.

இதனடிப்படையில் ஒவ்வொருவருக்கும் B/400,B/405,B/406, B/407, B/463, B/464, B/465, B/466
ஆகிய எட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அந்த வகையில் ஒரு வழக்குக்கு
ஒரு ஆட்பிணை என்ற அடிப்படையில் ஒருவருக்கு எட்டு ஆட் பிணையில் செல்ல
நீதிமன்று உத்தரவு பிறப்பித்தது.

ஆகவே மேற்குறித்த 28 பேரையும் பிணைக்க எடுக்க குறித்த கிராமங்களிலிருந்து
224 பேர் நீதிமன்றுக்கு சமூகமளித்திருந்தனர்.

spot_imgspot_img

More like this
Related

மட்டு சித்தாண்டி முருகன் ஆலயத்தில் கும்பாபிஷேகம் செய்யுமாறு கோரி ஆலயத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்

சித்தாண்டி ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயம் 14 வருடங்கள் ஆகியும் கும்பாபிஷேகம்...

கொள்ளை வழக்கில் முன்னாள் அமைச்சரின் மகனுக்கு பிணை

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் அனுத பண்டார மற்றும்...

இலங்கை தமிழ் மக்களுக்கு நீதி கோரி லண்டனில் இலங்கை தூதரகத்தின் முன் கறுப்பு 83 ஜூலை போராட்டம்.

1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட ,இன...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்