கல்முனை பிரதேச செயலகத்தில் கூட்டமைப்பினர் கலந்துரையாடல்!

Date:

கல்முனை பிரதேச செயலகத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகள் இன்று விஜயம் செய்து கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

நீண்டகாலமாக இழுபறியிலுள்ள கல்முனை விவகாரம் பற்றி இன்று ஆராயப்பட்டது.

கல்முனை பிரதேச செயலக விவகாரம் சம்பந்தமான கூட்டமானது எதிர்வரும் மே மாதம் 4 ஆம் திகதி உள்ளூராட்சி அமைச்சின் செயலாளருக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்குமிடையில் இடம்பெறவுள்ளது.

அந்த கூட்டத்தின் முடிவை தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை தீர்மானிப்பதென இன்று முடிவெடுக்கப்பட்டது.

இன்றைய கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஏ சுமந்திரன், கோ.கருணாகரம், இரா.சாணக்கியன், த.கலையரசன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேந்திரன், சீ.யோகேஸ்வரன், மாணவர் மீட்பு பேரவை தலைவர் செ.கணேஸ், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னணி துணைச் செயலாளர் அ.நிதான்சன், ஆகியோர் தற்போதைய பிரதேச செயலாளராக செயற்படும் ரி.அதிசயராஜை சந்தித்து கலந்துரையாடினர்.

இச்சந்திப்பு கல்முனை உப பிரதேச செயலகத்திற்குள் நடைபெற்றது.

-பா.டிலான்-

spot_imgspot_img

More like this
Related

இலங்கை தமிழ் மக்களுக்கு நீதி கோரி லண்டனில் இலங்கை தூதரகத்தின் முன் கறுப்பு 83 ஜூலை போராட்டம்.

1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட ,இன...

மட்டு லயன்ஸ் கழகத்தின் ‘நாங்கள் சேவை செய்கிறோம்’ எனும் தொனிப் பொருளில் பன்சேனையில் இலவச மருத்துவ முகாம்

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் வழிகாட்டுதலின் கீழ், மட்டக்களப்பு ஸ்பெக்ட்ரம்...

இந்தியா செல்லும் இலங்கை யாத்ரீகர்களுக்கான விசா கட்டண கொள்கையில் மாற்றமில்லை

இந்தியாவுக்குப் பயணம் செய்யும் இலங்கை யாத்ரீகர்களுக்கான விசா கட்டணக் கொள்கையில் எந்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்