நடிகை நந்திதா ஸ்வேதாவிற்கு கொரோனா பாதிப்பு..

Date:

கொரோனா அறிகுறி உள்ள நிலையில் தனக்குத் தானே தனிமைப்படுத்திக் கொண்டதாக நடிகை நந்திதா ஸ்வேதா தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை நந்திதா ஸ்வேதா. அட்டகத்தி படத்தின் மூலமாக சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். இந்தப் படத்தைத் தொடர்ந்து எதிர்நீச்சல், முண்டாசுப்பட்டி, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, புலி, காத்திருப்போர் பட்டியல், கலகலப்பு 2, அசுரவதம், உள்குத்து, தேவி 2, 7, கபடதாரி, நெஞ்சம் மறப்பதில்லை என்று பல படங்களில் நடித்துள்ளார்.

தற்போது ஐபிசி 376 என்ற பட த்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில், நாடு முழுவதும் மீண்டும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் கொரோனா தொற்றால் சினிமா பிரபலங்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில், தற்போது நடிகை ந ந்திதா ஸ்வேதாவுக்கு கொரோனா தொற்று அறிகுறி இருப்பது தெரியவந்துள்ளது. இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: எனக்கு கொரோனா தொற்று அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக நான் என்னை தனிமைப்படுத்திக் கொண்டேன். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

வாழைச்சேனையில் குளத்தில் மீன்பிடிக்க சென்ற ஆண் ஒருவர் குளத்தில் இருந்து சடலமாக மீட்பு

வாழைச்சேனை சுங்காங்கேணி குளத்தில் மீன்பிடிக்க சென்ற  ஆண் ஒருவர் குளத்து நீரில்...

மட்டு நகரில் கடை தொகுதிகள் தீப்பற்றியதை தீயணைப்பு படையினர் 4 மணித்தியால போராட்டத்தின் பின்னர் தீயை கட்டுப்பாட்டில்

மட்டக்களப்பு நகரில் சென்றல் வீதி மற்றும் பஸார் வீதியிலுள்ள கடைகள் இன்று...

வெனிசுலா நிலநடுக்க உயிரிழப்பு 3,500ஐ கடந்தது!

வெனிசுலாவின் இரட்டை நிலநடுக்கங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,535 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்