நிகழ்நிலை காப்பு சட்டமூலத்துக்கு எதிராக மேலும் 3 மனுக்கள்!

Date:

அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்பிற்கு முரணானது என தீர்ப்பளிக்குமாறு கோரி மேலும் மூன்று மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

அரசாங்க தகவல் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கலாநிதி ரங்க கலன்சூரியவினால் மனு ஒன்று முன்வைக்கப்பட்டது.

யுனெஸ்கோவின் முன்னாள் பணிப்பாளர் விஜயானந்த ஜயவீர மற்றும் ஊடக சட்ட மன்றம் ஆகியன சார்பில் இரண்டு மனுக்களும் முன்வைக்கப்பட்டன.

அந்த மனுக்களின் பிரதிவாதியாக சட்டமா அதிபர் குறிப்பிடப்பட்டுள்ளார்.

சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்துவதற்காக அரசாங்கம் நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதாக மனுதாரர்கள் கூறுகின்றனர்.

இந்த சட்டமூலத்தில் உள்ள விதிகள் ஊடகவியலாளர்களின் சுதந்திரத்தை கடுமையாக பாதிக்கும் என மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதுமட்டுமல்லாமல், அரசியலமைப்புச் சட்டம் உத்தரவாதம் அளித்துள்ள கருத்துச் சுதந்திரம், சிந்தனைச் சுதந்திரம் ஆகிய அடிப்படை உரிமைகள் உத்தேச மசோதாவின் விதிகளால் கடுமையாக மீறப்படுவதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.

பொதுமக்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்படுவதால், அது தொடர்பான சட்டமூலத்தை நிறைவேற்றுவது அவசியமானால், அதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகள் அல்லது சர்வஜன வாக்கெடுப்பு மூலம் அங்கீகாரம் பெறப்பட வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் மனுதாரர்கள் மேலும் கோரியுள்ளனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

“தமிழ்நாடு வெல்லும்” – வாக்கு செலுத்திய பின் முதல்வர் ஸ்டாலின் பேட்டி

‘தமிழ்நாடு வெல்லும்’ என தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தனது வாக்கினை செலுத்திய...

அமெரிக்க கடற்படை செயலாளர் பதவி நீக்கம்

அமெரிக்க கடற்படைச் செயலாளர் ஜான் பீலன் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவர் பணிநீக்கம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்