யாழ் பிரபல பாடசாலை அதிபர் நீக்கம்

Date:

யாழ்ப்பாணம் கல்வி வலயத்துக்கு உட்பட்ட பிரபல பாடசாலையொன்றின் அதிபர், அந்த பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டு, வலயக்கல்விப் பணிமனையில் இணைக்கப்பட்டுள்ளார்.

கணக்காய்வு திணைக்களத்தின் விசாரணையை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

விடுவிக்கப்பட்டுள்ள அதிபருடன், பாடசாலை பழைய மாணவர் சங்கத்தின் ஒரு பகுதியினர் மோதல் போக்கை கடைப்பிடித்த நிலையில் இந்த சம்பவம் நடந்தது.

நல்லாட்சிக்காலத்தில் கம்பெரலிய திட்டத்தின் கீழ் பாடசாலை மதில் அமைப்பதற்காக ரூ.20 இலட்சம் ஒதுக்கப்பட்டிருந்தது. இதற்கு மேலும் ரூ.5 இலட்சம் தேவைப்பட்ட நிலையில், பாடசாலை பழைய மாணவர் சங்கத்திடம் கடன்பெற்று கட்டுமான பணிகள் முடிவடைந்திருந்தன.

பழைய மாணவர் சங்கத்தின் கடனுடன் தொடர்புடைய கணக்கு பதிவு குறிப்பொன்று காரணமாக, கணக்காய்வு திணைக்கள விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

தற்போது, அதிபர் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டு, வலயக்கல்வி பணிமனையில் இணைக்கப்பட்டுள்ளார்.

பதவியிலிருந்து விடுவிக்கப்பட்ட அதிபர், கடந்த 2017ஆம் ஆண்டில் பதவியேற்ற போது, கடுமையான சர்ச்சையேற்பட்டது. பிறிதொரு அதிபரை பதவியேற்க வைக்க பழைய மாணவர் சங்கத்தின் ஒரு பிரிவு விரும்பியது. அப்போதைய வடமாகாண கல்வியமைச்சர் க.சர்வேஸ்வரனின் தலையீட்டில், அதிபர் பதவியேற்றிருந்தார்.

தற்போது, அதிபர் மீதான நடவடிக்கையின் பின்னணியில் பழைய மாணவர் சங்கத்தின் ஒரு தரப்பின் நடவடிக்கையே காரணமென குறிப்பிடப்படுகிறது.

கணக்காய்வு அறிக்கையின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்ட பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கையெடுக்கப்படும். அவர் பதவியிலிருந்து ஓய்வுபெற 1 வருடமே உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

மட்டு நகரில் கடை தொகுதிகள் தீப்பற்றியதை தீயணைப்பு படையினர் 4 மணித்தியால போராட்டத்தின் பின்னர் தீயை கட்டுப்பாட்டில்

மட்டக்களப்பு நகரில் சென்றல் வீதி மற்றும் பஸார் வீதியிலுள்ள கடைகள் இன்று...

வெனிசுலா நிலநடுக்க உயிரிழப்பு 3,500ஐ கடந்தது!

வெனிசுலாவின் இரட்டை நிலநடுக்கங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,535 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள்...

நீர்கொழும்பு சிறைக்கலவரம்: துப்பாக்கிகளை பறித்து சுட்ட கைதிகள்!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவம் குறித்து முறையான மற்றும் விரிவான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்