மலையக பகுதிகளில் பயணிப்பவர்களுக்கு எச்சரிக்கை: வேகம் விவேகமல்ல!

Date:

அதிவேகமாக சென்ற கார் ஒன்று வழுக்கி, வீதியின் அருகே இருந்த மண் மேட்டில் மோதி வீதியின் குறுக்கே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இன்று (29) அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

டிக்ஓயா பகுதியில் இருந்து அதிவேகமாக பயணித்த கார், கடும் மழை காரணமாக வழுக்கி அருகில் உள்ள மண்மேட்டில் மோதி வீதியின் குறுக்கே கவிழ்ந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தின் போது காருக்குள் சாரதி மட்டும் பயணித்தார். அவருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை.

கனமழை காரணமாக வீதிகள் வழுக்கும் நிலையில் உள்ளதால், அவ்வழிகளில் வாகனங்களை ஓட்டும் போது கவனமாக இருக்குமாறு சாரதிகளுக்கு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

நீர்கொழும்பு சிறைக்கலவரம்: துப்பாக்கிகளை பறித்து சுட்ட கைதிகள்!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவம் குறித்து முறையான மற்றும் விரிவான...

சாவகச்சேரி உபதவிசாளர் விவகாரம்: இடைக்கால கட்டளைக்கு நீதிதன்றம் மறுப்பு

சாவகச்சேரி நகராட்சி மன்றம் உப தவிசாளர் மற்றும் சபையின் உறுப்புரிமையிலிருந்து தன்னை...

நீர்கொழும்பு சிறைக்கைதிகள் இடமாற்றம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்த கைதிகளில் ஒரு தொகுதியினர், கண்டி பல்லேகலையில் அமைந்துள்ள...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்