இலங்கையின் அதிபர் சேவையில் 4718 தரம் 3 வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்குமாறு கல்வி அமைச்சுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜூன் 30, 2021 அன்று இரு தரப்பினரும் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டது.
முதன்மைப் பரீட்சைக்குத் தோற்றிய பரீட்சார்த்திகள் குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை பரிசீலித்த உயர் நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.
இந்த மனு பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, ஜனக்த சில்வா மற்றும் ஷிரான் குணரத்ன ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் பரிசீலிக்கப்பட்டது.




