24.5 C
Jaffna
February 3, 2025
Pagetamil
இலங்கை

புகையிரதத்தின் மேற்கூரையில் பயணித்த இளைஞன் பலி

ஹொரபே ரயில் நிலையத்திற்கு அருகில் ரயிலின் மேற்கூரையில் பயணித்த இளைஞர் ஒருவர் விபத்துக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார்.

கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலின் கூரையில் பயணித்த இளைஞன் ஹொரபே ரயில் நிலையத்தின் கூரையில் மோதினார்.

விபத்தில் படுகாயமடைந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இவர் கம்பஹா மொரகொட பிரதேசத்தைச் சேர்ந்த டி.ஐ.பெரேரா என்பவரே உயிரிழந்தார்.

இவர் மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட மாணவர் என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புகையிரத சாரதிகள் இன்று ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட புகையிரத சேவை காரணமாக மக்கள் புகையிரதத்தை ஆபத்தான முறையில் பயன்படுத்துவதாக அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

யாழில் சிவப்பு குடிநீர் விநியோகம் – அவதியில் மக்கள்

east tamil

அரசாங்கத்தின் மீது சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு

east tamil

டிஜிட்டல் கொடுப்பனவுகளின் புதிய யுகம்

Pagetamil

ஐம்பது மீற்றரில் உள்ள பாடசாலை மைதானத்திற்கு ஒரு கிலோ மீற்றர் நடந்து செல்லும் மாணவர்கள்

Pagetamil

புதையல் தோண்டிய இருவர் கைது

east tamil

Leave a Comment