கண்டதும் காதலில் விழும் இலங்கைப் பெண்களுக்கு ஒரு எச்சரிக்கை: அழகிய யுவதிக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!

Date:

பாதுக்க பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியென குறிப்பிட்டு, அழகிய யுவதியொருவரை மாற்றி வலையில் விழுத்தி, மொரந்துடுவ பிரதேசத்தில் உள்ள விடுதிக்கு அழைத்துச் சென்று பலாத்காரம் செய்து பல இலட்சம் பெறுமதியான தங்கநகைகளை கொள்ளையடித்து சென்ற நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

கைதானவர் முன்னாள் இராணுவச் சிப்பாய்.

சந்தேக நபர் பொலிஸாரால் வழங்கப்படும் அடையாள அட்டையை போலியாக தயாரித்து, பொலிஸ் உத்தியோகத்தர் போல் பாவனை செய்துள்ளதாக மொரந்துடுவ பொலிஸார் தெரிவித்தனர்.

மசாஜ் நிலையம் ஒன்றில் பணிபுரியும் அழகிய யுவதியுடன் உறவை வளர்த்துக்கொண்ட சந்தேகநபர், பாதுக்க பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எனக் கூறி அவருடன் விடுதி ஒன்றிற்குச் சென்றுள்ளார்.

யுவதியை பலாத்காரம்  செய்த சந்தேக நபர், அவரிடம் இருந்த தங்க நெக்லஸ் உட்பட சில தங்கநகைகளை திருடிக்கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.

யுவதியின் முறைப்பாட்டிற்கு அமைய மொரந்துடுவ பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளனர். சந்தேகநபர் பொலிஸ் உத்தியோகத்தர் போல் நடித்து பல பெண்களை ஏமாற்றி துஷ்பிரயோகம் செய்து பெறுமதியான பொருட்களை கொள்ளையடித்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

மஹர சிறைக்கலவரத்தில் ஒருவர் பலி

சனிக்கிழமையன்று மஹர சிறையில் ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து, ஒரு கைதி உயிரிழந்ததாகவும்,...

பேச்சாளர் மகாவிஷ்ணுவை காதலிப்பதாக நடிகை மிருணாளினி ரவி தகவல்

ஆன்மிக பேச்சாளர் மகாவிஷ்ணுவை காதலிப்பதாக நடிகை மிருணாளினி ரவி தெரிவித்துள்ளார். இது குறித்து...

ஸ்​பெ​யினுக்​குள் ஊடுருவிய மொராக்கோ அகதிகள் உணவு இல்லாமல் மீண்டும் நாடு திரும்பினர்

ஸ்​பெ​யினுக்​குள் ஊடுரு​விய அகதி​கள் உணவு இல்​லாமல் மீண்​டும் சொந்த நாடான மொராக்​கோவுக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்