பேஸ்புக் காதலால் ஏற்பட்ட மோதல்: பெண்ணை தாக்கிய 3 பெண்கள் கைது!

Date:

பேஸ்புக் காதலையடுத்து ஏற்பட்ட முரண்பாட்டையடுத்து, ஜா-எல மற்றும் வெலிவேரிய பிரதேசத்தை சேர்ந்த ஐந்து பெண்கள் பொலன்னறுவையில் உள்ள வீடொன்றுக்கு சென்று பெண் ஒருவரை தாக்கியுள்ளதாக பொலன்னறுவை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று பெண்களை பொலன்னறுவை பொலிஸார் நேற்று (23) கைது செய்திருந்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 54 வயதுடைய பெண்ணும் அடங்குவதுடன், அவர் ஜா-எல பகுதியைச் சேர்ந்தவர்.

பொலன்னறுவையில் பெண்களால் தாக்கப்பட்ட யுவதியுடன் தனது மகனுக்கு தொடர்பு இருப்பதாக அவர் குற்றம் சுமத்தியிருந்தார்.

இந்த ஜோடி பேஸ்புக் ஊடாக அறிமுகமாகி காதலில் விழுந்துள்ளது.

இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் பின்னரே இந்த தாக்குதல் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை (21) இடம்பெற்றுள்ளதாகவும், இது தொடர்பில் கைது செய்யப்பட்ட ஏனைய மூவரில் ஜா-எல மற்றும் வெலிவேரிய பிரதேசங்களில் வசிக்கும் 16 மற்றும் 19 வயதுடைய இரண்டு யுவதிகள் அடங்குவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

30 துப்பாக்கிக் குண்டுகள் முழங்க கர்நாடக அரசு மரியாதையுடன் இசையரசி எஸ்.ஜானகி உடல் தகனம்

மறைந்த பிரபல பின்​னணி பாடகி எஸ்​.ஜானகி​யின் உடல், கர்​நாடக அரசின் முழு...

நீர்கொழும்பு சிறை விசாரணையில் பல மர்மங்கள்

6ஆம் திகதி நீர்கொழும்பு சிறையில் நடந்த மோதலின் போது 8 சிறைச்சாலை...

டெங்கு அபாயத்திலிருந்து மீள்கிறது கொழும்பு பல்கலைக்கழக அழகியல் பீடம்

டெங்கு பரவல் காரணமாக இரண்டு வாரங்களுக்கு மூடப்பட்டிருந்த கொழும்பு அழகியல் பல்கலைக்கழகத்தை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்