கொத்தலாவல பல்கலைக்கழக வைத்தியசாலையின் இடிதாங்கிகளின் செப்பு தகடுகள் திருட்டு

Date:

வெரஹெர, கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலையின் 10 கட்டிடங்களில் பொருத்தப்பட்டிருந்த இடிதாங்கியின் செப்புத் துண்டுகள் திருடப்பட்டுள்ளன.

6.5 மில்லியன் ரூபா பெறுமதியான செப்பு பட்டைகள் திருடப்பட்டுள்ளன.

வைத்தியசாலையின் சிரேஷ்ட மின் பொறியியலாளர் லெப்டினன்ட் கேணல் பி.கே.டி.கொடகந்த பொரலஸ்கமுவ பொலிஸில் நேற்று முன்தினம் (22) முறைப்பாடு செய்துள்ளார்.

திருடப்பட்ட செப்பு பட்டைகளின் மதிப்பு சுமார் ரூ.6,597,000 என முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 30 முதல் ஜூலை 3 வரை இந்த திருட்டு நடந்துள்ளது.

முதற்கட்ட விசாரணையில், இந்த வைத்தியசலை வளாகத்தில் வெளியாட்கள் நுழைந்து இதுபோன்ற திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட இடமில்லை என பொலிஸார் கண்டறிந்தனர்.

spot_imgspot_img

More like this
Related

சீனாவில் காலணி தொழிற்சாலை தீவிபத்தில் 28 பேர் பலி

கிழக்கு சீனாவில் வியாழக்கிழமை ஒரு காலணி தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில்...

பாலியல் குற்றச்சாட்டில் காத்தான்குடி நகரசபை உறுப்பினர் கைது!

ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் தேசிய பட்டியல் ஊடாக காத்தான்குடி நகர...

அறிவுசார் சொத்துரிமையை மீறிய விமல் ரூ.10 இலட்சத்தை இழப்பீடாக வழங்க உத்தரவு

'இல்லை என்பதற்குப் பதிலாக உண்மை' என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை வெளியிட்டதன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்