ஹரினுக்கு சிஐடி அழைப்பாணை!

Date:

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோவை குற்றவியல் புலனாய்வுத் துறையில் நாளை முன்னிலையாகுமாறு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.

ஹரின் தற்போது, கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு சென்ற சி.ஐ.டியினர் அழைப்பாணையை கையளித்துள்ளனர்.

2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணை தொடர்பாக அறிக்கை பதிவு செய்ய சிஐடி முன் ஆஜராகுமாறு அவருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.

எனினும், சிகிச்சை காரணமாக வேறொரு திகதியை ஒதுக்குமாறு ஹரின் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை, ஹரின் பெர்னாண்டோவை கைது செய்ய முயற்சிகள் நடப்பதாக பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தை எதிர்க்கும் எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினருக்குமான தற்போதைய அவலநிலை இது என்றார்.

spot_imgspot_img

More like this
Related

சாவகச்சேரி உபதவிசாளர் விவகாரம்: இடைக்கால கட்டளைக்கு நீதிதன்றம் மறுப்பு

சாவகச்சேரி நகராட்சி மன்றம் உப தவிசாளர் மற்றும் சபையின் உறுப்புரிமையிலிருந்து தன்னை...

நீர்கொழும்பு சிறைக்கைதிகள் இடமாற்றம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்த கைதிகளில் ஒரு தொகுதியினர், கண்டி பல்லேகலையில் அமைந்துள்ள...

நீர்கொழும்பு சிறை விவகாரத்தை ஆராய 3 பேர் கொண்ட குழு!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பாக முறையான மற்றும் விரிவான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்