கொழும்பு பல்கலைக்கழக மாணவன் போல் காட்டிக்கொண்டு சட்ட பீட பேராசிரியரின் கைப்பையில் இருந்து 13,000 ரூபாவை திருடிய குற்றச்சாட்டில் குருதுவத்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இளைஞனை ஜூன் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் இன்று (22) உத்தரவிட்டுள்ளார். 6
இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டவர் அனுராதபுரத்தை சேர்ந்த ஷஷிக ஆரியவன்ச முத்யன்சேலா என்ற 27 வயதுடைய இளைஞராவார்.
சந்தேகநபர் கொழும்பு பல்கலைக்கழகத்திற்குள் பிரவேசித்து அனுமதியின்றி பெண்கள் கழிவறைக்குள் நுழைந்து கதவு பூட்டை உடைத்து திருடியுள்ளார் என குருதுவத்தை பொலிஸார் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.
இந்த சந்தேக நபருக்கு பல நீதிமன்றங்களில் திருட்டு தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் குருதுவத்தை பொலிஸார் நீதிமன்றில் உண்மைகளை சமர்ப்பித்துள்ளனர்.



