விபத்தில் தந்தையும், மகனும் பலி

Date:

மொனராகலை வீதியில் பசறை மூன்றாம் தூண் பிரதேசத்தில் நேற்று (21) மாலை 3.00 மணியளவில் மோட்டார் சைக்கிளும் லொறியும் நேருக்கு நேர் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் தந்தையும் மகனும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பசறை மீதும்பிட்டிய கலபடவத்தையைச் சேர்ந்த மனோகரன் டில்ஷான் (19) மற்றும் ஆறுமுகம் மனோகரன் (50) ஆகிய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற டில்ஷான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், பின்னால் அமர்ந்து சென்ற ஆறுமுகம் பதுளை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (22) காலை உயிரிழந்துள்ளார்.

பசறையிலிருந்து மொனராகலை நோக்கி பயணித்த லொறி ஒன்று மற்றுமொரு லொறியை கடக்க முற்பட்ட போது எதிர்திசையில் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இவ்விபத்து தொடர்பில் இரண்டு லொறிகளின் சாரதிகளும் பசறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் பிரதி மாகாண ஆணையாளராக வைத்தியர் அன்டன் அனஸ்டீன் கடமையேற்பு

கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் பிரதி மாகாண ஆணையாளராக வைத்தியர்...

அம்பாறை மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளராக சிரேஷ்ட அதிகாரி எஸ். கரன் நியமனம்

அம்பாறை மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளராக இலங்கை நிர்வாக சேவையின் முதலாம் தர...

இங்கினியாகலையில் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் மூவர் கைது : அம்பாறை பொலிஸாரின் விசேட சுற்றிவளைப்பில் பிரதான விநியோகஸ்தரும் சிக்கினார்

அம்பாறை மாவட்டத்தில் போதைப்பொருள் வர்த்தகத்தை ஒழிக்கும் நோக்கில் அம்பாறை பிரதி பொலிஸ்மா...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்