சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டைத் தொடர்ந்து சொந்த ஊரிலிருந்து கொழும்புக்கு திரும்புவோருக்கு வசதியாக இன்று முதல் கூடுதல் ரயில்கள் சேவையில் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
சிறப்பு ரயில் சேவைகளிற்காக, ஏற்கனவே திட்டமிட்ட சில ரத்து செய்யப்பட்டுள்ளன.
கொழும்புக்கு திரும்புவோருக்கு வசதியாக பதுளை, யாழ்ப்பாணம் மற்றும் பெலியத்த பகுதிகளிலிருந்து ரயில்கள் இயக்கப்படவுள்ளன.



