26.3 C
Jaffna
March 2, 2025
Pagetamil
குற்றம்

மூன்றரை வயது குழந்தையை உறக்கத்திலேயே கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு தற்கொலை செய்த தாயின் கள்ளக்காதலன்!

மூன்றரை வயது குழந்தையை உறக்கத்திலேயே கழுத்தை நெரித்து கொலை செய்த 21 வயது இளைஞன், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

காலி மாவட்டத்தின், மெகத்தன்ன பகுதியில் இந்த சம்பவம் நடந்தது.

உயிரிழந்த குழந்தையின் தாயாரின் கள்ளக்காதலனே இந்த கொலையை செய்தார்.

மூன்று வருடங்களும் ஆறு மாதங்களுமான எம்.நெதும் சஸ்ஸர என்ற சிறுவனும், 21 வயதுடைய இளைஞன் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இறந்த குழந்தையின் தாய் தனது கணவரை பிரிந்து இறந்த நபருடன் ஒன்றாக வாழ்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

நேற்று (12) தனது 10 வயது குழந்தையை பாடசாலையில் விட்டுவிட்டு வீடு திரும்பும் வேளையில் இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக இதுவரையிலான விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குழந்தையின் சடலம் மெகத்தன்ன பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், பிரேத பரிசோதனைக்காக களுத்துறை போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பத்தேகம குழு மோதல் – இரு கோதரர்கள் கொலை

Pagetamil

மாணவியை துஷ்பிரயோகதிற்கு உட்படுத்தியோர் கைது

Pagetamil

திருடிய பெண்ணை காட்டிக்கொடுத்த கிளி

Pagetamil

சுடலையில் மறைத்து வைக்கப்பட்ட ஆயுதங்கள் மீட்பு

Pagetamil

பேஸ்புக்கில் அறிமுகமாக அழகான யுவதியை சந்திக்க ஹோட்டலுக்கு சென்ற தொழிலதிபர்; அனைத்தையும் உருவிக் கொண்டு எஸ்கேப் ஆன யுவதி!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!