தம்புள்ளை-கல்கிரியகம வீதியில் உள்ள தெல்தின்னவேவ பகுதியில் வாய்க்காலில் பேருந்து கவிழ்ந்ததில் பதினெட்டு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று (06) காலை இந்த சம்பவம் நடந்தது.
பேருந்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக வாய்க்காலில் விழுந்ததாக சாரதி தெரிவித்துள்ளார்.
அப்பகுதியில் வசிப்பவர்களின் உதவியுடன், பேருந்தில் சிக்கிய பயணிகளை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாக பொலிசார் தெரிவித்தனர். ஐந்து ஆண்கள் மற்றும் 13 பெண்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயங்கள் காரணமாக பலரின் நிலைமை மோசமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.



