மின்னல் தாக்கி யுவதி பலி

Date:

வெல்லவாய பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட ஹந்தபானாகல, கென் ஹத பகுதியில் மின்னல் தாக்கியதில் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று முன்தினம் (7) மாலையில் இந்த சம்பவம் நடந்தது.

தொழில்நுட்ப கல்லூரியில் பயிலும் இந்த யுவதி, மாலையில் வீடு திரும்பிய போது, மழை பெய்ததால், வீட்டிற்கு அருகில் உள்ள தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்த தனது தாய் மற்றும் தந்தைக்கு, குடையை கொண்டு சென்றுள்ளார்.

அவர்களிடம் குழையை வழங்கி, பெற்றோருடன் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, யுவதி மின்னல் தாக்குதலுக்கு உள்ளானர்.

பெற்றோருக்கு மத்தியில் நடந்து வரும் போதே அவர் மின்னல் தாக்குதலுக்கு உள்ளானர். தாயாரும் சிறியளவில் பாதிக்கப்பட்டுள்ளார்.

மின்னல் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தில் கென் ஹத பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய சமோதி மல்ஷானி என்ற யுவதியே உயிரிழந்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

பிரான்ஸில் கத்திக்குத்து நடத்த முயன்ற இலங்கையரை சுட்டுக்கொன்ற பொலிஸ்

மே 30, சனிக்கிழமையன்று, பிரான்ஸின், பாரிஸ் நகர், போபிக்னியில் இரண்டு கத்திகளுடன்...

கசிப்பு வியாபாரி கைது!

மட்டக்களப்பு, கொக்குவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுவிஸ் கிராமப் பகுதியில் சட்டவிரோத நீண்ட...

மட்டக்களப்பில் ‘சரக்கு’ விற்ற பெண் கைது!

கல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள யூனியன்கொலனி பிரதேசத்தில் சட்டவிரோதமாக பௌர்ணமி தினத்தில் மதுபான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்