மின்னல் தாக்கி யுவதி பலி

Date:

வெல்லவாய பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட ஹந்தபானாகல, கென் ஹத பகுதியில் மின்னல் தாக்கியதில் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று முன்தினம் (7) மாலையில் இந்த சம்பவம் நடந்தது.

தொழில்நுட்ப கல்லூரியில் பயிலும் இந்த யுவதி, மாலையில் வீடு திரும்பிய போது, மழை பெய்ததால், வீட்டிற்கு அருகில் உள்ள தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்த தனது தாய் மற்றும் தந்தைக்கு, குடையை கொண்டு சென்றுள்ளார்.

அவர்களிடம் குழையை வழங்கி, பெற்றோருடன் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, யுவதி மின்னல் தாக்குதலுக்கு உள்ளானர்.

பெற்றோருக்கு மத்தியில் நடந்து வரும் போதே அவர் மின்னல் தாக்குதலுக்கு உள்ளானர். தாயாரும் சிறியளவில் பாதிக்கப்பட்டுள்ளார்.

மின்னல் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தில் கென் ஹத பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய சமோதி மல்ஷானி என்ற யுவதியே உயிரிழந்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

பிரித்தானிய பொலிசாரால் தேடப்படும் யாழ் இளைஞன்!

பிரித்தானியாவில் குற்றச்செயலில் ஈடுபட்ட யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவரை பொலிசார்...

கொடூர குற்றவாளி பஸ் லலித் நாளை இலங்கை அழைத்து வரப்படுகிறார்!

கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம், டுபாய் காவல்துறையால் கைது செய்யப்பட்ட, சக்திவாய்ந்த...

யாழில் நகைத்திருடர்கள் பேர் கைது!

யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் புகுந்து கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்