மே 9 ஆம் திகதி நடந்த வன்முறைச் சம்பவங்களின் போது, நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள், சொத்துக்கள் மற்றும் அலுவலகங்களைத் தாக்கி, எரித்து, அழித்ததற்காக ஆறு சந்தேக நபர்களும் ஒரு பெண் சந்தேக நபரும் கைது செய்யப்பட்டனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்களான அருந்திக பெர்னாண்டோ, விதுர விக்கிரமநாயக்க, தாரக பாலசூரிய, ரோஹித குணவர்தன மற்றும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோரின் சொத்துக்களை சேதப்படுத்தியமை தொடர்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 26, 44, 61, 53, 35, 32, 58 வயதுடைய லிஹினியாகம, ஹொரணை, கேகாலை மற்றும் இரத்மலானை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவு, கேகாலை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு, ஹொரணை மற்றும் தங்கொடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



