தையிட்டி திஸ்ஸ விகாரையால் ஆக்கிரமிக்கப்பட்ட பவானி வீதி விடுவிப்புக்கு முயற்சித்த வலிகாமம் வடக்கு பிரதேச சபைக்கு எதிராக பலாலி பொலிசார் தொடர்ந்த வழக்கு மல்லாகம் நீதிவான் நீதிமன்றால் சற்றுமுன் தள்ளுபடி செய்யப்பட்டு சபைத் தவிசாளர் சோ.சுகிர்தன் மற்றும் சபை செயலாளர் ஆகியோர் வழக்கில் இருந்து இன்று விடுவிக்கப்பட்டனர்.
வலிகாமம் வடக்கு பிரதேச சபை சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஆஜராகி தமது வாதங்களை முன்வைத்ததுடன் பிரதேச சபை சட்டத்தரணி ச.கஜேந்திரனும் ஆஜராகினார்.




