மனைவியுடன் சண்டையிட்டு விபரீத முடிவெடுக்கும் இலங்கை ஆண்களுக்கு எச்சரிக்கை சம்பவம்!

Date:

மனைவியுடனான குடும்பத் தகராறு காரணமாக கம்புருபிட்டிய பகுதியில் உயர் அழுத்த மின் கம்பத்தில் ஏறியதால் மின்சாரசபைக்கு ஏற்பட்ட சேதத்திற்காக, இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட ரூபாயை மின்சாரசபைகு செலுத்துமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் 28ஆம் திகதி உத்தரவிட்டது.

21ஆம் திகதி பிற்பகலில், உயர் அழுத்த மின் கம்பத்தில் ஏறிய கம்புருபிட்டிய, பரகம்முல்ல பகுதியைச் சேர்ந்த ஒருவரைக் காப்பாற்றுவதற்காக, மாத்தறை மாவட்டம் கம்புருபிட்டியவைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் மின்சாரசபை மின்சாரத்தைத் துண்டிக்க வேண்டியிருந்தது. கம்புருபிட்டிய பொலிஸாரால், அந்த நபரின் குடும்பத்தினர் சம்பவ இடத்திற்குக் கொண்டுவரப்பட்டனர், அவர் கைது செய்யப்பட்டு மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார், அதன் பின்னர் அந்த நபர் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

24-ஆம் திகதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ​​இரண்டு மணி நேரத்திற்கும் மேலாகப் பல பகுதிகளில் ஏற்பட்ட மின்வெட்டின் காரணமாக மின்சார சபையால் 201,059.90  ரூபா இழப்பு ஏற்பட்டதாக அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன. சந்தேக நபர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதால், மேற்கூறிய தொகையை மின்சாரசபைகுச் செலுத்துமாறும், நவம்பர் 3-ஆம் திகதி வழக்கை மீண்டும் விசாரிக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.

spot_imgspot_img

More like this
Related

விசாரணையென்றதும் எகிறியதா இதயத்துடிப்பு?: மலைவிழுங்கி மகாதேவனின் மனைவியின் சிங்கப்பூர் திருகுதாளம் அம்பலம்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ, கொழும்பு நிதிக்குற்றப் புலனாய்வுப்...

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை படகுச் சேவைக்கான நிதியுதவி இந்தியா மீண்டும் நீட்டித்துள்ளது

நாகப்பட்டினம் மற்றும் காங்கேசன்துறை இடையிலான பயணிகள் படகு சேவைக்கான நிதியுதவியை இந்திய...

வீடு மாறி குண்டடித்த இருவரும் கைது!

தெஹிவளை, சிரிசங்கபோ மாவத்தையில் உள்ள ஒரு வீட்டில் கைக்குண்டு வீசப்பட்டதில் இரு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்