நாடு முழுவதும் நேற்று (ஜூலை 17) முன்னெடுக்கப்பட்ட ‘ரடம ஏகட்ட’ (Ratama Ekata) தேசிய விசேட நடவடிக்கையின் போது மொத்தம் 706 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாரின் தகவலின்படி, நாடு முழுவதும் 708 சுற்றிவளைப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அவற்றின் மூலம் இந்த கைது நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவருக்கு எதிராக சட்டவிரோதமாகச் சம்பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சொத்துக்கள் தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், 11 சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், 4 சந்தேகநபர்களை புனர்வாழ்வு சிகிச்சைக்காக அனுப்புவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குற்றச்செயல்களை கட்டுப்படுத்தவும், பொதுமக்களின் பாதுகாப்பை வலுப்படுத்தவும் இத்தகைய நாடு தழுவிய விசேட நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.




