நாடு முழுவதும் ‘ரடம ஏகட்ட’ விசேட நடவடிக்கை – 700-க்கும் மேற்பட்டோர் கைது

Date:

நாடு முழுவதும் நேற்று (ஜூலை 17) முன்னெடுக்கப்பட்ட ‘ரடம ஏகட்ட’ (Ratama Ekata) தேசிய விசேட நடவடிக்கையின் போது மொத்தம் 706 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாரின் தகவலின்படி, நாடு முழுவதும் 708 சுற்றிவளைப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அவற்றின் மூலம் இந்த கைது நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவருக்கு எதிராக சட்டவிரோதமாகச் சம்பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சொத்துக்கள் தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், 11 சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், 4 சந்தேகநபர்களை புனர்வாழ்வு சிகிச்சைக்காக அனுப்புவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குற்றச்செயல்களை கட்டுப்படுத்தவும், பொதுமக்களின் பாதுகாப்பை வலுப்படுத்தவும் இத்தகைய நாடு தழுவிய விசேட நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

FIFA WC 2026 | பிரான்ஸை துவம்சம் செய்து வெண்கலம் வென்றது இங்கிலாந்து!

2026 உலகக் கிண்ண கால்பந்து தொடரின் மூன்றாவது இடத்திற்கான ஆட்டத்தில், பிரான்ஸ்...

‘இதுதான் வாழ்க்கை’: குழந்தை யமாலுடன் எடுத்த புகைப்படம் பற்றி மெஸ்ஸி விளக்கம்!

அர்ஜென்டினா கப்டன் லயோனல் மெஸ்ஸி, யமால் குழந்தையாக இருந்தபோது இருவரும் ஒன்றாகப்...

பிரேத பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு

கல்முனை - மட்டக்களப்பு பிரதான வீதி, மருதமுனை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்