உயர் கல்வி கற்கும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ரூ.5,000 மாதாந்திர கொடுப்பனவு

Date:

மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்களுக்கு மாதாந்திர ரூ.5,000 கொடுப்பனவு வழங்கும் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) தெரிவித்துள்ளது.

UGC துணைத் தலைவர் பேராசிரியர் வசந்த லியனகே கூறுகையில், உயர்கல்வியைத் தொடரும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஆதரவாக இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இந்த கொடுப்பனவு வழங்கும் தீர்மானம் அமுல்படுத்தப்பட்டதாக தெரிவித்தார்.

மேலும், இம்மாதம் முதல் கொடுப்பனவு வழங்கும் செயல்முறை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், தகுதி பெற்ற மாணவர்கள் மாதாந்திர ரூ.5,000 கொடுப்பனவுடன், திட்டம் தொடங்கிய ஜனவரி மாதம் முதல் நிலுவையில் உள்ள தொகைகளையும் பெறவுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த திட்டம், மாற்றுத்திறனாளி மாணவர்கள் எதிர்நோக்கும் நிதிசார் சவால்களை குறைத்து, அவர்கள் பல்கலைக்கழகக் கல்வியை தொடர்ந்து மேற்கொள்வதற்கு ஊக்கமளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

spot_imgspot_img

More like this
Related

அம்பாறை மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளராக சிரேஷ்ட அதிகாரி எஸ். கரன் நியமனம்

அம்பாறை மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளராக இலங்கை நிர்வாக சேவையின் முதலாம் தர...

இங்கினியாகலையில் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் மூவர் கைது : அம்பாறை பொலிஸாரின் விசேட சுற்றிவளைப்பில் பிரதான விநியோகஸ்தரும் சிக்கினார்

அம்பாறை மாவட்டத்தில் போதைப்பொருள் வர்த்தகத்தை ஒழிக்கும் நோக்கில் அம்பாறை பிரதி பொலிஸ்மா...

நிந்தவூரில் வாழ்வாதார மேம்பாட்டு தேவையுடைய குடும்பங்களுக்கு தையல் மெஷின் வழங்கும் நிகழ்வு

நிந்தவூரில் இயங்கிவரும் Best of Young சமூக சேவைகள் அமைப்பின் ஏற்பாட்டில்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்