இலங்கையில் மலேரியாவைக் கட்டுக்குள் வைத்திருக்கும் முயற்சிகளைச் சிக்கலாக்கக்கூடிய, மலேரியா தொடர்பான ஒரு ஒட்டுண்ணி தோன்றுவது குறித்து சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
தேசிய மலேரியா எதிர்ப்பு மற்றும் நுளம்பு ஒழிப்புப் பிரச்சாரத்தின் இயக்குநர் பிரசங்க செரசிங்க, கடந்த ஆண்டு நாட்டில் 34 மலேரியா நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளதாகவும், இவ்வாண்டு இதுவரை ஏழு நோய்த்தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
பாரம்பரிய மலேரியா ஒட்டுண்ணிகளைப் போலல்லாமல், மனிதர்களையும் விலங்குகளையும் பாதிக்கக்கூடிய இந்த ஒட்டுண்ணி, அதனை ஒழிப்பதை மிகவும் கடினமாக்குவது குறித்து அவர் கவலை தெரிவித்தார்.
“இந்த ஒட்டுண்ணி ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக இருந்து வருகிறது, ஆனால் விலங்குகளைத் தாக்கும் அதன் திறன், அதனை மிகவும் அபாயகரமானதாக ஆக்குகிறது. இது பரவினால், மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் சிகிச்சை தேவைப்படலாம் என்பதால், நோயைக் கட்டுப்படுத்துவது மிகவும் சவாலானதாகிவிடும்,” என்று அவர் கூறினார்.
இந்த ஒட்டுண்ணி, மலேரியா கட்டுப்பாட்டில் இலங்கையின் முன்னேற்றத்தைப் பாதிக்கக்கூடும் என்று செரசிங்க எச்சரித்ததோடு, அதன் பரவலைத் தடுக்க தீவிர கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அழைப்பு விடுத்தார்.




