வவுனியா கனகராஜன்குளத்தில் சொகுசு கார் மோதியதில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
நேற்று (2) இரவு 11.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது.
வீதியில் நடந்து சென்ற இளைஞர்களை பிஎம்டபிள்யூ ரக கார் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே இரண்டு இளைஞர்கள் கொல்லப்பட்டனர். பின்னால் வந்த வாகனம் மோதியதில், விபத்தை ஏற்படுத்திய காரும் சேதமடைந்தது.
உயிரிழந்தவர்களில் ஒருவர், முன்னாள் அரச அதிபர் இமெல்டா சுகுமாரின் மகன் ஆவார்.




