கடலில் மூழ்கிய 3 மாணவர்களின் சடலங்கள் கரையொதுங்கின

Date:

ஹுங்கம கலமதிய கடற்கரையில் கடல் அலைகளில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போன மூன்று மாணவர்களின் உடல்கள் நேற்று (31ஆம் திகதி) கடற்கரையில் கரை ஒதுங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக ஹுங்கம பொலிசார் தெரிவித்தனர்.

வெசாக் பௌர்ணமி அன்று, நேற்று முன்தினம் (30ஆம் திகதி) கடலில் நீந்தச் சென்றபோது அந்த மூன்று மாணவர்களும் காணாமல் போயுள்ளனர்.

கடற்கரையில் கரை ஒதுங்கிய மூன்று உடல்களில் இரண்டு, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்களுடையது என்றும் பொலிசார் தெரிவித்தனர்.

இறந்தவர்கள், டபிள்யூ. ஜி. பசிந்து ஹேஷன் (18 வயது), சகோதரர்களான ஆர். பி. அஷான் துலஞ்சனா (17 வயது) மற்றும் ஆர். பி. துஷன் திலுஷ (12 வயது) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த மூன்று மாணவர்களும் ஹுங்கம விஜயபா தேசியப் பாடசாலையில் முறையே 13, 12 மற்றும் 7ஆம் வகுப்புகளில் படித்து வருகின்றனர் என்று பொலிசார் தெரிவித்தனர்.

இவர்களுடன் கடலில் நீந்தச் சென்று கடலில் மூழ்கிய மற்றொரு இளைஞர் காப்பாற்றப்பட்டதாக காவல்துறை தெரிவித்தது.

spot_imgspot_img

More like this
Related

Update: சென்னையில் இலங்கை இளம்பெண் கார் ஏற்றிக் கொலை: பாரில் நடனமாடுவதில் ஏற்பட்ட தகராறால் விபரீதம்

சென்னை கோயம்​பேட்​டில் மது​பான பாரில் நடனம் ஆடும்​போது இரு தரப்​பினரிடையே ஏற்​பட்ட...

சுரேஸ் சாலேவுக்கு மேலும் 90 நாள் தடுப்புக்காவல்

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களில் தொடர்பு இருந்ததாகச் சந்தேகத்தின் பேரில் கைது...

பிக்மீ சாரதியிடம் கொள்ளையடித்தவர்கள் கைது!

இன்று காலை சமூக வலைதளங்களில் குற்றக் காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து பரவலான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்