வடக்கு சட்டத்தரணிகள், பொலிசாருக்கான டிஜிட்டல் சட்டப்பணி கருத்தரங்கம்

Date:

வடமாகாண சட்டத்தரணிகள் மற்றும் பொலிஸாருக்கான டிஜிட்டல் சட்டப் பணி தொடர்பான சட்டக் கருத்தரங்கம் இன்றைய தினம் சனிக்கிழமை யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நடைபெற்றது.

மல்லாகம் சட்டதரணிகள் சங்கம், இலங்கை தகவல் தொழில்நுட்ப சட்டத்தரணிகள் சங்கத்துடன் இணைந்து இந்த கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தனர்.

இணையச் சட்டம், எண்ணிமச் சான்றுகள் மற்றும் தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் சட்ட நடைமுறைகள் உள்ளிட்ட, வளர்ந்து வரும் தகவல் தொடர்பு தொழில்நுட்பம் தொடர்பான சட்டச் சிக்கல்கள் குறித்த விழிப்புணர்வையும் அறிவையும் மேம்படுத்துதல்.

சிவில் வழக்குகளில் மின்னணு ஆதாரங்களின் ஏற்புத்தன்மை போன்ற விடயங்கள் தொடர்பில் விளக்கவுரைகள் நடைபெற்றன.

இலங்கை தகவல் தொழில்நுட்ப சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவரும் , இலங்கை சட்டத் தரணிகள் சங்கத்தின் முன்னாள் செயலாளருமான சட்டத்தரணி கலாநிதி சுனில் அபேயரத்ன மற்றும் இந்திய உச்ச நீதிமன்ற சட்டத்தரணி பிரபாகரன் ராமச்சந்திரன், யாழ் பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் நளிந்த டில்ருக் ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டனர்.

நிகழ்வின் பிரதம அதிதியாக தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயசந்திரமூர்த்தி கலந்துகொண்டார்.

spot_imgspot_img

More like this
Related

வன்முறை முறைப்பாடுகளை கையாள வடக்கு பொலிஸாருக்கு தமிழில் விசேட பயிற்சி

சிறுவர் பெண்களுக்கு எதிரான வன்முறைகள், அடிப்படை உரிமைகள், பால்நிலை சமத்துவம் தொடர்பிலான...

ஆறு தமிழ் கட்சிகள் முக்கிய விடயங்களில் ஒருமித்து செயற்பட திட்டம்

ஆறு தமிழ் பேசும் அரசியல் கட்சிகள், பரஸ்பர அக்கறையுள்ள விஷயங்களில் இணைந்து...

30 துப்பாக்கிக் குண்டுகள் முழங்க கர்நாடக அரசு மரியாதையுடன் இசையரசி எஸ்.ஜானகி உடல் தகனம்

மறைந்த பிரபல பின்​னணி பாடகி எஸ்​.ஜானகி​யின் உடல், கர்​நாடக அரசின் முழு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்