இந்துக்கள் அல்லாதவர்கள் இந்த கோயிலுக்குள் நுழைவதென்றால் பசு சாணம், சிறுநீர் உட்கொள்ள வேண்டும்!

Date:

உத்​த​ராகண்​டில் சார் தாம் யாத்​திரை தொடங்​கி​யுள்ள நிலை​யில், இந்து அல்​லாதவர்​கள் கோயிலுக்​குள் நுழைவதற்கு சில கட்​டுப்​பாடு​கள் விதிக்​கப்​பட்​டுள்​ளன. கங்​கோத்ரி கோயில் நிர்​வாகக் குழு​வின் தீர்​மானத்​தின் ​படி, இந்து அல்​லாதவர்​கள் ‘பஞ்​சகவ்​யம்’ உட்​கொண்​டால் மட்​டுமே கோயிலுக்​குள் நுழைய அனு​ம​திக்​கப்​படு​வார்​கள்.

அவர்​கள் சனாதன தர்​மத்தை பின்​பற்​றுகிறார்​கள் என்​பதை உறு​திப்​படுத்த, பசு​வின் சிறுநீர் உள்​ளிட்ட பொருட்​கள் கலந்த பஞ்​சகவ்​யத்தை உட்​கொள்​வது கட்​டாய​மாக்​கப்​பட்​டுள்​ள​தாக கங்​கோத்ரி கோயில் நிர்​வாகம் தெரி​வித்​துள்​ளது. பசு​வின் பால், தயிர், நெய், கோமி​யம் (பசு​வின் சிறுநீர்) மற்​றும் பசு​வின் சாணம் ஆகிய 5 பொருட்​களு​டன் கங்கை நீரும் கலந்த கலவையே பஞ்​சகவ்​யம் ஆகும்.

இதுகுறித்து யமுனோத்ரி கோயில் நிர்​வாக செய்​தித் தொடர்​பாளர் புருஷோத்​தம் உன்​னியல் கூறும்​போது, “நாங்​கள் பல காலங்​களாக பஞ்ச கவ்ய பாரம்​பரி​யத்​தைப் பின்​பற்று​கிறோம். சனாதனத்​தின் மீது ஈடு​பாடு இல்​லாதவர்​களின் வருகை அதி​கரித்து வரு​கிறது. எனவே, சனாதனிகள் மட்​டுமே சன்​ன​தி​யில் தரிசனம் செய்ய இந்த நடவடிக்கை அனு​ம​திக்​கும்​” என்​றார்​.

Share post:

spot_imgspot_img

More like this
Related

நயன்தாராவின் இந்திப் பட ரிலீஸ் அறிவிப்பு

கார்த்தி, நாகார்ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்களை இயக்கியவர்...

பிரதமர் மோடி கொடுத்த 10 ரூபாயை ரூ.1.11 லட்சத்துக்கு வாங்க பலர் ஆர்வம்

மேற்கு வங்க தேர்தல் பிரச்சாரத்துக்காக பிரதமர் மோடி கடந்த வாரம் ஜார்கிராமுக்கு...

கசிப்பு தேடிய பொலிஸ்காரர் கொலை: குற்றவாளிக்கு மரணதண்டனை!

சட்டவிரோத மதுபான ஆலை மீதான சோதனையின் போது ஒரு பொலிஸ் உத்தியோகத்தரை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்