சுரேஷ் சாலே தொடர்ந்து தடுப்புக்காவலில்

Date:

முன்னாள் அரச புலனாய்வு சேவை (SIS) பணிப்பாளர், மேஜர் ஜெனரல் (ஓய்வு) சுரேஷ் சாலே மீது பிறப்பிக்கப்பட்ட தடுப்புக் காவல் உத்தரவு தொடர்ந்து அமலில் இருக்கும் என கொழும்பு கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமர இன்று உத்தரவிட்டார்.

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான தொடர் விசாரணைகள் தொடர்பாக, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) சுரேஷ் சாலேயை இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது.

சந்தேக நபருக்காக ஆஜரான சட்டத்தரணி அசித் சிறிவர்தன, மூன்றாவது சந்தேக நபரான சுரேஷ் சாலே, இச்சம்பவம் தொடர்பாக நீதவான் முன்னிலையில் வாக்குமூலம் அளிக்க விரும்புவதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இதற்குப் பதிலளித்த நீதவான், நீதிமன்ற நடைமுறையின்படி, வாக்குமூலம் அளிக்க அனுமதி கோரும் சந்தேக நபருக்கு, அதுகுறித்த விடயத்தைப் பரிசீலிப்பதற்காக நியாயமான கால அவகாசம் வழங்கப்படும் என்று குறிப்பிட்டார்.

அதன்படி, மூன்றாவது சந்தேக நபர் அத்தகைய வாக்குமூலத்தை அளிக்க உத்தேசித்துள்ளாரா என்பதைத் தீர்மானிக்க நீதவான் அவருக்கு ஓர் மாத கால அவகாசம் வழங்கினார்.

சந்தேக நபரின் முடிவு குறித்து மே 20 அன்று நீதிமன்றத்திற்குத் தெரிவிக்கப்பட வேண்டும் என்றும், அவர் பகிரங்க நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட வேண்டும் என்றும் நீதவான் மேலும் உத்தரவிட்டார்.

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து சுரேஷ் சாலே கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்.

spot_imgspot_img

More like this
Related

அல்லைப்பிட்டியில் அருட்தந்தை ஜிம் பிறவுண் உள்ளிட்ட 22 பேரின் 20ஆவது ஆண்டு நினைவேந்தல்

அல்லைப்பிட்டி பங்குத்தந்தையாக பணியாற்றிய அருட்தந்தை ஜிம் பிறவுண் அடிகளார் மற்றும் அவரது...

கிழக்கு பல்கலைக்கழக விடுதியில் மாணவி தற்கொலை அதனை கண்ட இரு மாணவிகள் மயங்கி வீழ்ந்தனர்- மாவட்டத்தில் 7 மாதத்தில் 84 தற்கொலை

கிழக்கு பல்கலைக்கழக கல்லடி சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரி விடுதியில்...

காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களிடம் வாக்குமூலம் பதிவு

கோப்பாய் பிரதேச செயலகத்தில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தினரால் இன்று வாக்குமூலம் பெறும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்