மட்டக்களப்பில் போதை வியாபாரிகள் பலர் கைது!

Date:

மட்டக்களப்பு மாவட்டத்தில் 6 பொலிஸ் நிலைய பிரிவுகளில் கஞ்சா, ஐஸ் போதைப்பொருள் சட்டவிரோத கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட மற்றும் நீதிமன்ற பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட 3 பேர் உட்பட 10 பேரை நேற்று ஞாயிற்றுக்கிழமை (15) கைது செய்துள்ளதாக அந்தந்த பொலிஸ் நிலைய பொலிசார் தெரிவித்தனர்.

பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றில் 400 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள், 1370 மில்லிக்கிராம் கஞ்சாவுடன் வியாபாரி ஒருவரையும், வவுணதீவில் 1500 மில்லி லீற்றர் கசிப்புடன் வியாபாரி ஒரு வரையும்.

கல்குடாவில் 4000 ஆயிரம் மில்லி லீற்றர் கசிப்புடன் வியாபாரி ஒரு வரையும் ஏறாவூர், 820 மில்லி கிராம் கஞ்சாவுடன் வியாபாரி ஒருவரையும் கரடியனாறில் 1000 மில்லி லீற்றர் கசிப்புடன் ஒருவரையும், கொக்கட்டிச்சோலையில் 1500 மில்லி லீற்றர் கசிப்புடன் ஒருவரையும் நீதிமன்ற பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாகி வந்த 3 உட்பட 4 பேரை கைது செய்தனர்.

இவ்வாறு கசிப்பு கஞ்சா போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட 7 பேரையும் நீதிமன்ற பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட 3 பேர் உட்பட 10 பேரை கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்டவர்களை அந்தந்த பொலிஸ் பிரிவுகளில் உள்ள நீதிமன்றங்களில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அந்தந்த பொலிஸ் நிலைய பொலிசார் தெரிவித்தனர்.

-கனகராசா சரவணன்-

spot_imgspot_img

More like this
Related

தமிழகத்தில் நடக்கும் குதிரை பேரத்தை தடுத்து நிறுத்த கோரி ஆளுநரிடம் அதிமுக மனு

“அதிமுக எம்எல்ஏக்களை விலைபேசும் தவெகவின் நடவடிக்கையை ஆளுநர் தடுத்து நிறுத்த வேண்டும்”...

அஜித் தாயார் மறைவு: முதல்வர் விஜய், அரசியல் தலைவர்கள் இரங்கல்

நடிகர் அஜித் குமாரின் தாயார் மோகினி மணி (வயது 85) உடல்நலக்குறைவு...

டுபாயிலிருந்து தப்பியோடும் இலங்கை பாதாள உலக குற்றவாளிகள்

டுபாயில் பதுங்கியிருக்கும் குற்றவாளிகளைக் கைது செய்வதற்காக காவல்துறை ஒரு இரகசிய நடவடிக்கையைத்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்