குருநகரில் யாத்திரிகர்கள் சென்ற படகு கவிழ்ந்து 2 பேர் பலி: சிலர் மாயம்!

Date:

யாழ்ப்பாணம் குருநகர் இறங்குத்துறையில் படகு ஒன்று இன்று (6) கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர்.

நீரில் மூழ்கி விபத்துக்குள்ளானவர்களில் 13 பேர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

அவர்களில் இரண்டு ஆண்கள் உயிரிழந்தனர், மேலும் மூவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் (2 பெண்கள் ஒரு ஆண்).

மேலும் 8 பேர் சாதாரண சிகிச்சை அறையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பாலைத்தீவு திருவிழாவுக்கு யாத்திரிகர்கள் சென்ற படகு ஒன்றே இன்று காலை 6 மணியளவில் இவ்வாறு விபத்துக்குள்ளானது.

குறித்தப் படகில் 25 பேர் பயணித்துள்ள நிலையில், மேலும் சிலர் மீட்கப்பட்டுள்ளதுடன், காணாமல் போனவர்களை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக கடற்படை குறிப்பிட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

திறைசேரி அதிகாரி தற்கொலை செய்து கொண்டது உறுதி!

நிதி அமைச்சகத்தின் இடைநீக்கம் செய்யப்பட்ட உதவிப் பணிப்பாளர் ஒருவரின் சந்தேகத்திற்கிடமான மரணம்,...

வெயின் உச்சம் ஆபத்தான நிலைமைகளில் மாடுகள்

தற்போது நிலவி வரும் கடும் வெயில் காரணமாக யாழ்ப்பாணம் ஊர்காவற்துறைபிரதேசங்களில் மாடுகள்...

முழங்காவிலில்  சமத்துவக் கட்சியின் மே தின கூட்டம்

சமத்துவ கட்சியின் மே தின கூட்டம் கிளிநொச்சி முழங்காவில் நாச்சிக்குடா சந்தியில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்