வரலாற்றுச் சிறப்புமிக்க நகுலாம்பிகாதேவி நகுலேச்சரர் தேவஸ்தான வருடாந்த மகோற்சவம் இன்று(2) காலை 10.00 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
இன்று ஆலயத்தின் பூஜைகளிடம் பெற்று சுவாமி உள்வீதி வலம்வந்து கொடியேற்ற திருவிழா முன்னெடுக்கப்பட்டது.
இன்று ஆரம்பமாகும் வருடாந்த மகோற்சவத்தில் எதிர்வரும் 15ம் திகதி காலை தேர்த்திருவிழாவும் இரவு சிவராத்திரியும் இடம்பெற்று மறுநாள் கண்டகி தீர்த்தத்தில் தீர்த்தோற்சவமும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.




