கிவுல் ஓயா திட்டத்திற்கு எதிராக பெரும் போராட்டம்

Date:

கிவுல் ஓயா நீர்த்தேக்க திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம் (02) நெடுங்கேணி பேருந்து நிலையத்திற்கு முன்பாக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்த போரட்டத்தில் பெருந்திரளான மக்கள் பங்கேற்றிருந்தனர்.

இந்த போராட்டத்திற்கு இடையே, இந்த திட்டத்தை உடனடியாக நிறுத்துமாறு கோரி நெடுங்கேணி பிரதேச செயலாளரை சந்தித்து பாராளுமன்ற உறுப்பினர் இரா.சணக்கியன் மகஜர் ஒன்றை கையளித்தார்.

கிவுல் ஓயா திட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டும், இது சிறிய போராட்டமே, எனினும் அரசாங்கம் இந்த திட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்தால் பாரிய விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என இதன்போது சாணக்கியன் நெடுங்கேணி பிரதேச செயலாளரிடம் வலியுறுத்தினார்.

இந்த எதிர்ப்புக் குரலை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லுமாறும் நெடுங்கேணி பிரதேச செயலாளரிடம் இதன்போது மேலும் வலியுறுத்தப்பட்டது.

பொருளாதார நெருக்கடி காரணமாக 2023 ஆம் ஆண்டில் இடைநிறுத்தப்பட்ட கிவுல் ஓயா (Kiul Oya) அபிவிருத்தித் திட்டம் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு மற்றும் விவசாயப் பிரச்சினைகளுக்குத் தீர்வாக இத்திட்டம் அமையுள்ளது.

இதற்காக ஏற்கனவே மதிப்பிடப்பட்ட செலவு ரூ . 23,456 மில்லியன் ஆக திருத்தம் செய்யப்பட்டுள்ளதுடன், உள்நாட்டு நிதியைப் பயன்படுத்தி 2026 முதல் 2031 ஆம் ஆண்டிற்குள் பணிகளை முடிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

எரிபொருள் நெருக்கடி: அரச ஊழியர்களுக்கு புதன் கிழமைகளிலும் விடுமுறை!

தற்போது நிலவும் எரிபொருள் விநியோகச் சிக்கல்களைக் கருத்திற்கொண்டு, அதனை எதிர்கொள்ளும் வகையில்...

எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு

‘தமிழ் சிறுகதைகளின் தடங்கள்’ என்ற நூலுக்காக எழுத்தாளர் ச.தமிழ்செல்வனுக்கு 2025-ம் ஆண்டுக்கான...

கியூபாவுடன் பேச்சுவார்த்தை தொடர்கிறது, ஈரானுக்குப் பிறகு நடவடிக்கை சாத்தியம்: டிரம்ப்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை அமெரிக்கா விரைவில் கியூபாவுடன் ஒரு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்