போதைப்பொருள் கடத்தியவர்கள் தடுப்புக்காவலில்

Date:

தென் கடற்பரப்பில் பலநாள் மீன்பிடிப் படகு ஒன்றில் போதைப்பொருள் கடத்திய சம்பவம் தொடர்பில் கைதான 6 சந்தேகநபர்களையும் எதிர்வரும் 8 ஆம் திகதி வரை தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க போதைப்பொருள் தடுப்பு பணியகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (3) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

குறித்த பலநாள் மீன்படி படகில் இருந்து 251.18 கிலோகிராம் ஐஸ் ரக போதைப்பொருள் மற்றும் 85 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டிருந்தது.

பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்தினால் கைது செய்யப்பட்ட இந்தச் சந்தேகநபர்கள், கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

போதைப்பொருள் தடுப்புப் பணியகத்தின் கோரிக்கையை ஏற்ற நீதவான், இந்த தடுப்பு காவல் உத்தரவை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

கிழக்கு மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முன்வந்த ஒரே ஜனாதிபதி அனுரவாம்!

மட்டக்களப்பு, ஸ்ரீ மங்களாராமயவின் விகாராதிபதியான அம்பிட்டிய சுமனரத்ன தேரர், கிழக்கு மாகாண...

வாகன, தங்க கடன்களுக்கான புதிய கடன் கட்டுப்பாடுகள்: இன்று முதல் நடைமுறை!

நிதித்துறையின் ஸ்திரத்தன்மையைப் பாதுகாக்கவும், அதிகப்படியான கடன் வழங்கலால் ஏற்படக்கூடிய அபாயங்களைக் குறைக்கவும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்