போதைப்பொருள் கடத்தியவர்கள் தடுப்புக்காவலில்

Date:

தென் கடற்பரப்பில் பலநாள் மீன்பிடிப் படகு ஒன்றில் போதைப்பொருள் கடத்திய சம்பவம் தொடர்பில் கைதான 6 சந்தேகநபர்களையும் எதிர்வரும் 8 ஆம் திகதி வரை தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க போதைப்பொருள் தடுப்பு பணியகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (3) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

குறித்த பலநாள் மீன்படி படகில் இருந்து 251.18 கிலோகிராம் ஐஸ் ரக போதைப்பொருள் மற்றும் 85 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டிருந்தது.

பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்தினால் கைது செய்யப்பட்ட இந்தச் சந்தேகநபர்கள், கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

போதைப்பொருள் தடுப்புப் பணியகத்தின் கோரிக்கையை ஏற்ற நீதவான், இந்த தடுப்பு காவல் உத்தரவை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

உடல் பருமன், ரத்தக் கொதிப்பு, நீரிழிவு நோய்கள் இருந்தால் அமெரிக்க விசா கிடையாது

இதய நோய், சுவாசக் கோளாறு, புற்றுநோய், நீரிழிவு, ரத்தக் கொதிப்பு, உடல்...

கறுப்பு யூலை: கற்காத பாடங்கள் நூல் அறிமுக நிகழ்வு

வடலி வெளியீட்டினரால் வெளியிடப்பட்ட தெ.ஞாலசீர்த்தி மீநிலங்கோ அவர்கள் எழுதிய கறுப்பு யூலை:...

யாழில் போதை நுகர்ந்த 3 பேர் சிக்கினர்

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளை நுகர்ந்து கொண்டிருந்த மூன்று பேர் கையும் களவுமாக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்