பூநகரி- சங்குப்பிட்டி பாலத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து 4 வயது குழந்தை உயிரிழந்துள்ளது,
இன்று (28) காலை இந்த சம்பவம் நடந்தது.
தாயார் மோட்டார் சைக்கிளை செலுத்த மற்றொரு பிள்ளை, உயிரிழந்த பிள்ளையை பிடித்திருந்தது.
பிடி தவறி குழந்தை வீதியில் விழுந்ததா அல்லது அதிக காற்றினால் விழுத்தப்பட்டதா என தெரியவில்லை.



