இலங்கை போக்குவரத்து சபையில் பெண்கள் விரைவில் சாரதிகள் மற்றும் நடத்துனர்களாக சேருவார்கள் என்று போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். அவர்களுக்கு விமானப் பணிப்பெண்கள் மட்டத்தில் புதிதாக வடிவமைக்கப்பட்ட சீருடைகள் வழங்கப்படவுள்ளன.
450 சாரதிகள் மற்றும் 300 நடத்துனர்களை பணியமர்த்துவதற்கான நேர்காணல்கள் நடைபெற்று வருவதாகவும், இதில் பெண் ஊழியர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஆரம்ப கட்டத்தில், இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்படுவதற்கு முன்பு, கொழும்பு மாவட்டத்தில் உள்ள பாடசாலைப் பேருந்துகளில் பெண்கள் பணியமர்த்தப்படுவார்கள்.




