முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் செப்டம்பர் 12 ஆம் திகதி வரை நுகேகோடா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
2020 ஆம் ஆண்டு அபே ஜன பல கட்சியின் பொதுச் செயலாளர் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தில் பொலிசார் ரத்ன தேரரை தேடிக்கொண்டிருந்தனர்.
ரத்ன தேரர் கட்சியின் பொதுச்செயலாளரை கடத்தி, 2020 தேர்தலின் பின் பாராளுமன்ற தேசியப்பட்டியல் ஆசனத்துக்காக பலவந்தமாக கையொப்பம் பெற்றதாக கூறப்படுகிறது.
கொழும்பு குற்றப் பிரிவினர் அவரது ராஜகிரிய விகாரையையும், பிற விகாரைகளையும் தியான மையங்கள் மற்றும் வீட்டு வளாகங்களையும் ஆய்வு செய்த போதும், அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
எனவே, கடந்த வாரம் (18), நுகேகொட மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ரத்ன தேரரிற்கு கைது வாரண்ட் பிறப்பித்தது.




