‘அதிகாரியின் கட்டளைப்படி கிருசாந்தியின் உடலை மட்டுமே புதைத்தார்’: சோமரத்ன ராஜபக்ஷவின் மனைவி தகவல்!

Date:

யாழ்ப்பாணத்தில் உள்ள செம்மணிப் புதைகுழி குறித்து சர்வதேச விசாரணை தொடங்கப்பட்டால், தனது கணவர் சாட்சியமளிக்கத் தயாராக இருப்பதாக லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷவின் மனைவி கூறியுள்ளார்.

கிருஷாந்தி குமாரசாமி கொலை வழக்கில் முதன்மைக் குற்றவாளியாக சோமரத்ன ராஜபக்ஷ தற்போது மரணதண்டனை கைதியாக உள்ளார்.

லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷவின் மனைவி சமீபத்தில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கு அனுப்பிய கடிதத்தில் இந்தக் கூற்றை முன்வைத்துள்ளார்.

தனது கடிதத்தில், கப்டன் லலித் ஹேவேஜின் உத்தரவின் பேரில் 7வது படைப்பிரிவின் தலைமையகத்தில் கொலை செய்யப்பட்ட பின்னர் செம்மணி சோதனைச் சாவடிக்கு கொண்டு வரப்பட்ட கிருஷாந்தி குமாரசாமி மற்றும் அவரது குடும்பத்தினரின் உடல்களை அடக்கம் செய்ததைத் தவிர வேறு எந்தச் செயலிலும் தனது கணவர் ஈடுபடவில்லை என்று அவர் வலியுறுத்துகிறார்.

கடந்த கால அரசாங்கங்கள் இராணுவத் தவறு செய்தவர்களைத் தண்டித்ததாக சர்வதேச சமூகத்திற்கு தங்களைக் காட்டிக் கொண்டதாகவும், உண்மையில் மூத்த அதிகாரிகளைப் பாதுகாப்பதாகவும், கீழ்நிலை வீரர்களை மட்டுமே தண்டிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

கிருஷாந்தி குமாரசாமி கொலைக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட லான்ஸ் கோப்ரல் ராஜபக்ஷ, அந்த சம்பவம் மற்றும் செம்மணி புதைகுழி தொடர்பாக தனது மனைவியிடம் சில தகவல்களை வெளிப்படுத்தியிருந்தார்.

இதன் அடிப்படையில், அவரது மனைவி எஸ்.சி. விஜேவிக்ரம, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் நீதி அமைச்சர் ஹர்ஷ நாணயக்கார ஆகியோருக்கு சுயாதீன விசாரணை கோரி கடிதங்களை அனுப்பியுள்ளார்.

இந்த வாரம் இந்த விவகாரம் தொடர்பாக லான்ஸ் கோப்ரல் ராஜபக்ஷவின் மனைவியும் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலுக்கு ஒரு கடிதம் அனுப்ப திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கிய கிருஷாந்தி குமாரசாமி கொலை வழக்கில், 1998 ஆம் ஆண்டு தீர்ப்பை வழங்கிய ட்ரயல்-அட்-பார் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு மரண தண்டனை விதித்தது. பின்னர், ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையையும் அவர்களின் மேல்முறையீட்டையும் உறுதி செய்து, அவர்களின் மேல்முறையீட்டை தள்ளுபடி செய்தது.

பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசாமி மற்றும் அவரது தாய், சகோதரன், அயலவர் ஆகியோர் இலங்கை இராணுவ வீரர்கள் கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததே இந்த வழக்காகும்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

முன்னாள் பொலிஸ் அதிகாரியின் காணிக்குள் சிறுத்தைத் தோல்!

புத்தளம், அட்டவில்லு பகுதியில் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவருக்குச்...

வித்தியா கொலை வழக்கில் தீர்ப்பு நாளை!

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில் குற்றவாளிகள் தொடர்ந்த மேன்முறையீட்டு மனுவின்...

யாழில் விஜய் இரசிகர் எடுத்த விபரீத முடிவு!

தமிழக சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம், வெற்றியீட்டியுள்ள...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்