புஷ்கர் – காயத்ரி இயக்கத்தில் சிவகார்த்திகேயன்: முதற்கட்டப் பணிகள் தொடக்கம்

Date:

புஷ்கர் – காயத்ரி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தின் பணிகள் மும்முரமாக தொடங்கப்பட்டுள்ளன.

தமிழில் ‘விக்ரம் வேதா’ படத்துக்கு பின் புஷ்கர் – காயத்ரி இயக்கத்தில் எந்தவொரு படமும் வெளியாகவில்லை. தற்போது சிவகார்த்திகேயனை வைத்து அடுத்த படத்தை இயக்க புஷ்கர் – காயத்ரி இணை முடிவு செய்திருக்கிறது. இதற்காக கதை, திரைக்கதை ஆகியவை இறுதி செய்யப்பட்டுவிட்டன. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு சாம் சி.எஸ் இசையமைக்கவுள்ளார்.

இந்தக் கூட்டணி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இப்போதைக்கு வெளியாகாது. ஆனால், படத்தின் முதற்கட்டப் பணிகளை தொடங்கிவிட்டார்கள். படப்பிடிப்பிற்கான இடங்கள் தேர்வு, நடிகர்கள் தேர்வு ஆகியவை விரைவில் தொடங்கவுள்ளது. அடுத்ததாக சிபி சக்கரவர்த்தி படம், பின்பு வெங்கட்பிரபு படம் ஆகியவை முடித்துவிட்டு புஷ்கர் – காயத்ரி படத்துக்கு தேதிகள் ஒதுக்கவுள்ளார் சிவகார்த்திகேயன்.

தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘பராசக்தி’ படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகின்றன. முதலில் சிவகார்த்திகேயன் நடிப்பில் செப்டம்பர் 5-ம் தேதி ‘மதராஸி’ வெளியாகவுள்ளது. அதனைத் தொடர்ந்து பொங்கல் வெளியீடாக ‘பராசக்தி’ வெளியாக இருக்கிறது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

40 ஆண்டுகளின் பின் ஈரானுக்குள் அமைதியாக நடக்கும் அதிகார மாற்றம்: மதகுருமாரை பின்தள்ளி ஆதிக்கம் செலுத்தும் இராணுவம்!

த நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையின் ஒரு விரிவான அறிக்கையின்படி, ஈரானின் முடிவெடுக்கும்...

அம்பியூலன்ஸ் மெதுவாக சென்றதால் பொலிஸ்காரர் உயிரிழப்பா?: பௌத்த பிக்கு குற்றச்சாட்டு

திருகோணமலை மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் இருந்து திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு ஏற்றிச்...

ஈரானுக்கு எதிராக அணு ஆயுதங்களை பயன்படுத்தமாட்டோம்: ட்ரம்ப்

ஈரானுக்கு எதிரான போரில் அணு ஆயுதத்தைப் பயன்படுத்த மாட்டேன் என்று அமெரிக்க...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்