கேகாலை சிறை சிறப்பு அறையில் முன்னாள் கடற்படைத்தளபதி

Date:

பொல்கஹவெல நீதவான் நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் கடற்படைத் தளபதி ஓய்வுபெற்ற அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன, கேகாலை சிறைச்சாலையில் உள்ள ஒரு சிறப்பு அறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

முன்னாள் கடற்படைத் தளபதி மற்றும் சுமார் 15 கைதிகள் அந்த அறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். முன்னாள் கடற்படைத் தளபதியின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அவரை இந்த அறைக்கு மாற்ற சிறைச்சாலைத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கடற்படை புலனாய்வு இயக்குநராக இருந்த காலத்தில் பொத்துஹெர பகுதியில் நடந்த ஒரு கடத்தல் மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவ விசாரணை தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறையினரால் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன நேற்று முன்தினம் (28) கைது செய்யப்பட்டு பொல்கஹவெல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இன்று (30) அடையாள அணிவகுப்புக்காக அவர் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

நீர்கொழும்பு சிறைக்கலவரம்: 4 கைதிகள் சந்தேகநபர்களாக அறிவிக்கப்பட்டனர்!

32 பேர் உயிரிழந்த நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் தொடர்பாக நான்கு சந்தேக...

யாழில் நிறைபோதையில் அட்டகாசம் செய்த இளைஞன்!

யாழ்ப்பாணம், பணடத்தரிப்பு பகுதியில் மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர் ஒருவர்...

கரூரில் 31 பேருக்கு அரசுப் பணி வழங்கிய அரசாணை ரத்து: உயர் நீதிமன்றம் அதிரடி

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களில் 31 பேரின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்