219 மருந்தகங்களின் உரிமம் இரத்து!

Date:

தேசிய மருத்துவ ஒழுங்குமுறை அதிகாரசபை ஜூலை 18, 2025க்குள் நாட்டில் உள்ள 219 மருந்தகங்களின் உரிமங்களை ரத்து செய்துள்ளதாக சுகாதார அமைச்சர்  நளிந்த ஜெயதிஸ்ஸ இன்று தெரிவித்தார்.

2024-2025 ஆம் ஆண்டுக்கான உரிமங்களைப் புதுப்பிப்பதற்காக தேசிய மருத்துவ ஒழுங்குமுறை அதிகாரசபை 2,039 விண்ணப்பங்களைப் பெற்றுள்ளதாகவும், 1,820 மருந்தகங்களுக்கு மட்டுமே உரிமங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், நிரந்தர மருந்தாளுநர்கள் இல்லாததால் 219 மருந்தகங்களில் 137 மருந்தகங்களின் உரிமம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறினார்.

நிரந்தர மருந்தாளுநர்கள் பணியமர்த்தப்படும் வரை அவர்களின் உரிமம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

சமூக மருந்தக நடைமுறைகளுக்கான வழிகாட்டுதல்களைப் பின்பற்றத் தவறியதால் 219 மருந்தகங்களில் 82 மருந்தகங்களின் உரிமங்களைப் புதுப்பிப்பதற்கான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.

spot_imgspot_img

More like this
Related

பிக்குகளுக்கு சிறப்பு நீதிமன்றம் என்ற ஜனாதிபதியின் யோசனை நாட்டை மேலும் பௌத்த மயமாக்கும் முயற்சி

பௌத்தத்தின் பேரால் முன்னெடுக்கப்படும் பேரினவாதத்திற்குள் மட்டும் அரசு கட்டுப்பட்டிருக்கவில்லை. மேலாக பௌத்த...

நாளையும் மின்சாரம் துண்டிக்கப்படலாம்

வழக்கத்திற்கு மாறாகக் குறைந்த மின்சாரத் தேவை மற்றும் அதிக சூரிய மின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்