கடனை அடைத்த பிறகு எரிபொருள் மீதான ரூ.50 வரி நீக்கப்படும்!

Date:

கடந்த அரசாங்கத்தின் போது திறைசேரியால் கையகப்படுத்தப்பட்ட இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) மொத்தக் கடனை அடைத்த பிறகு, எரிபொருள் மீதான ரூ.50 வரியை அரசாங்கம் நீக்கும் என்று மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி இன்று தெரிவித்தார்.

திறைசேரியால் கையகப்படுத்தப்பட்ட ரூ.884 பில்லியன் மொத்தக் கடனில் பாதி தற்போது செலுத்தப்பட்டுள்ளதாக அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகரவின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் ரூ.884 பில்லியன் கடனை திறைசேரியை கையகப்படுத்தியதாகவும், கடனை அடைக்க ஒரு லிட்டர் எரிபொருளுக்கு ரூ.50 வரி விதித்ததாகவும் கூறினார்.

“இப்போது கடனில் பாதி செலுத்தப்பட்டுள்ளது. கடனை முழுமையாக அடைத்த பிறகு எரிபொருள் மீதான ரூ.50 வரியை நீக்குவது குறித்து பரிசீலிப்போம்” என்று அவர் கூறினார்.

spot_imgspot_img

More like this
Related

னோஜனின் குடும்பத்திற்கு ரிஷாட் பதியுதீன் நேரில் ஆறுதல்: விடுதலைக்காகத் தீவிர முயற்சி

சவூதி அரேபியாவில் தண்டனை விதிக்கப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள கல்முனை, நற்பிட்டிமுனையைச்...

சஹ்ரானைக் கண்டதுமில்லை-பேசியதுமில்லை-ரிசாட் பதியுதீன்

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் முக்கிய சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசிமுடன் தனக்கு...

யாழில். இரண்டு கடலமைகளுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் , சேந்தான்குளம் பகுதியில் இன்றைய தினம் சனிக்கிழமை இரண்டு கடலமைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் சேத்தான்குளம் பகுதியில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்