தலைவர்கள் 75 வயதில் ஓய்வு பெற வேண்டும்: ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கருத்தால் பாஜகவில் சர்ச்சை

Date:

தலை​வர்​கள் 75 வயதில் ஓய்வுபெற வேண்​டும் என்று ஆர்​எஸ்​எஸ் தலை​வர் மோகன் பாகவத் தெரி​வித்​துள்​ளார். வரும் செப்​டம்​பரில் பிரதமர் மோடிக்கு 75 வயது நிறைவடை​யும் சூழலில் அவர் இவ்​வாறு கூறி​யிருப்​பது பாஜக​வில் சர்ச்​சையை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

ஆர்​எஸ்​எஸ் மூத்த தலை​வர் மோரோ பந்த் பிங்க்லே குறித்த புத்தக வெளி​யீட்டு விழா நாக்​பூரில் 9-ம் தேதி நடை​பெற்​றது. ஆர்​எஸ்​எஸ் தலை​வர் மோகன் பாகவத் கலந்​து​கொண்​டு, புத்​தகத்தை வெளி​யிட்​டார். விழா​வில் அவர் பேசும்​போது, ‘‘உங்​களுக்கு 75 வயது ஆகிறது என்​றால், நீங்​கள் ஒதுங்​கிக் கொண்டு மற்​றவர்​களுக்கு வழி​விட வேண்​டும்’’ என்​றார்.

வரும் செப்​டம்​பரில் பிரதமர் மோடிக்கு 75 வயது நிறைவடைகிறது. இதை சுட்​டிக்​காட்​டியே, மோகன் பாகவத் இவ்​வாறு கூறிய​தாக எதிர்க்​கட்​சிகள் தெரி​வித்​துள்​ளன. அவரது கருத்து பாஜக​வில் சர்ச்​சையை ஏற்​படுத்​தி​யுள்​ளது. இதுகுறித்து காங்​கிரஸ் பொதுச் செய​லா​ளர் ஜெய்​ராம் ரமேஷ் சமூக வலை​தளத்​தில் நேற்று வெளி​யிட்ட பதி​வில் கூறி​யுள்​ள​தாவது: பிரதமர் மோடிக்கு செப்​டம்​பர் 17-ம் தேதி 75 வயது ஆகிறது என்​பதை மோகன் பாகவத் மிக அழகாக நினை​வுபடுத்தி உள்​ளார். அதே​நேரம், மோகன் பாகவத்​துக்கு செப்​டம்​பர் 11-ம் தேதி 75 வயது ஆகிறது. இதே கருத்தை அவரிட​மும் பிரதமர் மோடி சொல்​லலாம். எப்​படியோ.. ஓர் அம்​பு, இரு இலக்​கு​கள்.இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்.

கடந்த 2014 மக்​களவை தேர்​தலுக்கு பிறகு, பாஜகவில் 75 வயது ஆகும் தலை​வர்​களுக்கு ஓய்வு அளிக்​கப்​படு​கிறது. அந்த வகை​யில், மூத்த தலை​வர்​கள் அத்​வானி, முரளி மனோகர் ஜோஷி உள்​ளிட்​டோருக்கு ஓய்வு அளிக்​கப்​பட்​டது. குஜ​ராத் முதல்​வ​ராக இருந்த ஆனந்தி பென், மத்​திய அமைச்​சர​வை​யில் இருந்த நஜ்மா ஹெப்​துல்லா ஆகியோர் 75 வயதை எட்​டியதும் பதவியை ராஜி​னாமா செய்​தனர். கடந்த 2019 மற்​றும் 2024 மக்​களவை தேர்​தலின்​போது 75 வயதை எட்​டிய தலை​வர்​களுக்கு பாஜக​வில் சீட் வழங்​கப்​பட​வில்​லை.

இந்த விவ​காரம் குறித்து அரசி​யல் நோக்​கர்​கள் கூறிய​தாவது: கடந்த 2022-ல் பாஜக மூத்த தலை​வர் எடியூரப்​பா, கட்​சி​யின் தேசிய செயற்​குழு உறுப்​பின​ராக நியமிக்​கப்​பட்​டார். அப்​போது அவருக்கு 79 வயது. அவர் 75 வயதை தாண்​டிய பிறகும் கர்​நாடக முதல்​வ​ராக பதவி வகித்​தார். பாஜக தேசிய செயற்​குழு உறுப்​பின​ராக 76 வயதான சத்​தி​ய​நா​ராயண் ஜாதியா நியமிக்​கப்​பட்​டார். 75 வயதில் ஓய்வு பெற வேண்​டும் என்று பாஜக​வில் அதி​காரப்​பூர்​வ​மாக எந்த விதி​யும் கிடை​யாது. வரும் 2029 மக்​களவை தேர்​தலிலும் மோடியே பிரதமர் வேட்​பாள​ராக முன்​னிறுத்​தப்​படு​வார் என்று மத்​திய அமைச்​சர்​கள் அமித் ஷா, ராஜ்​நாத் சிங் உள்​ளிட்ட பாஜக தலை​வர்​கள் ஏற்​கெனவே தெளிவுபடுத்​தி உள்​ளனர்​. இவ்​வாறுஅவர்​கள்​ தெரிவித்​துள்​ளனர்​.

spot_imgspot_img

More like this
Related

இங்கினியாகலையில் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் மூவர் கைது : அம்பாறை பொலிஸாரின் விசேட சுற்றிவளைப்பில் பிரதான விநியோகஸ்தரும் சிக்கினார்

அம்பாறை மாவட்டத்தில் போதைப்பொருள் வர்த்தகத்தை ஒழிக்கும் நோக்கில் அம்பாறை பிரதி பொலிஸ்மா...

நிந்தவூரில் வாழ்வாதார மேம்பாட்டு தேவையுடைய குடும்பங்களுக்கு தையல் மெஷின் வழங்கும் நிகழ்வு

நிந்தவூரில் இயங்கிவரும் Best of Young சமூக சேவைகள் அமைப்பின் ஏற்பாட்டில்,...

கனடா கனவுடன் சென்றவர்கள் எதியோப்பாவில் கடத்தல்: கிளிநொச்சி தரகர் கைது!

கனடாவில் வேலை வாங்கித் தருவதாக ஆசை காட்டி மூன்று இலங்கையர்களைக் கடத்திய,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்