முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் ஐந்து பேருக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கொழும்பு உயர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
ரம்புக்வெல்ல, அவரது மனைவி, மூன்று மகள்கள் மற்றும் ஒரு மருமகன் மீது இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழு, 43 குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளது.
இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவால் அவர்களின் சொத்துக்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் சமீபத்தில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுதலையாகியிருந்தனர்.



