குற்றப் புலனாய்வுத் துறை இதுவரை நடத்திய விசாரணைகளில், கடந்த ஆண்டு சுதந்திர தினம், வெசாக் தினம் மற்றும் கிறிஸ்துமஸ் தினத்தன்று ஜனாதிபதி பொது மன்னிப்பு என்ற பெயரில் சிறை அதிகாரிகள் 212 கைதிகளை சட்டவிரோதமாக விடுவித்திருப்பது தெரியவந்துள்ளது. சிறப்பு நாட்களில் ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்க ஜனாதிபதியால் அங்கீகரிக்கப்பட்ட கைதிகளின் பட்டியலுக்கு வெளியே இந்த நபர்கள் விடுவிக்கப்பட்டிருப்பதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சுதந்திர தினத்தன்று, 274 அல்லது அதை அண்மித்த கைதிகள் ஜனாதிபதி மன்னிப்பு மூலம் விடுவிக்க அனுமதிக்கப்பட்டனர். கடந்த வெசாக் தினத்தன்று, 388 கைதிகள் அல்லது அதை அண்மித்த எண்ணிக்கையான கைதிகள் அனுமதிக்கப்பட்டனர். கடந்த ஆண்டு, கிறிஸ்துமஸ் தினத்தன்று, 322 கைதிகள் அல்லது அதை அண்மித்த எண்ணிக்கையான கைதிகள் மன்னிப்புக்கு அனுமதிக்கப்பட்டனர்.
இந்தக் குழுவைத் தவிர, இந்த குறிப்பிட்ட நாட்களில் அங்கீகரிக்கப்படாத கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
விடுவிக்கப்பட்ட கைதிகள் தொடர்பாக எதிர்காலத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நீதி அமைச்சு சில நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் அந்த அதிகாரி கூறினார்.
தற்போது வெளியாகியுள்ள உண்மைகளின்படி, சிறைச்சாலை அமைப்பில் நடந்த இந்த சட்டவிரோத நடவடிக்கை தொடர்பான உண்மைகளை ஆய்வு செய்ய ஒரு ஜனாதிபதி ஆணைக்குழு அல்லது இதே போன்ற அதிகாரங்களைக் கொண்ட ஒரு குழுவை நியமிக்க வேண்டியிருக்கும் என்று அந்த அதிகாரி கூறினார்.
இந்த சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்ட பல சிறை அதிகாரிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மூத்த காவல்துறை அதிகாரி மேலும் தெரிவித்தார்.




